வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை
வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 1
திவ்விய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின முதலாவது அதிகாரம் முதலாவது வசனத்தில் நாம் பார்க்கும் போது சீக்கிரம் சம்பவிக்க வேண்டியவைகள் என்று எழுதி இருக்கிறது. இந்த புத்தகம் எழுதி 2000 வருடத்திற்கு மேல் ஆகிறது. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள் அப்படியென்றால் திடீரென சம்பவிக்க வேண்டியவைகள் என்று அர்த்தம். அப்படி சீக்கிரத்துல் சம்பவிக்க வேண்டிய காரியத்தை தேவன், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இயேசு கிறிஸ்து தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். அதாவது சடுதியாக திடீரென நடக்கப் போகிற சம்பவிக்க போகிற காரியத்தை தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும் பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இயேசு கிறிஸ்து ஒரு தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின காரியம் தான் இந்த வெளிப்படுத்தின விசேஷம்.
இரண்டாவது வசனத்தில் நாம் பார்க்கும்போது யோவான் தேவனுடைய வசனத்தை குறித்தும், இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சியை குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவிக்கிறார். யோவான் சாட்சியாக அறிவிக்கிற மூன்று காரியங்கள் இருக்கிறது. ஓன்று தேவனுடைய வசனத்தை குறித்து சாட்சியாக அறிவிக்கிறார். இரண்டாவது இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சியை சொல்லுகிறார். மூன்றாவது தான் என்னென்ன கண்டார் என்பதை குறித்தும் சாட்சியாக தெரிவிக்கிறார்.
மூன்றாவது வசனத்தில் பார்க்கும் போது இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும் , கேட்கிறவர்களும் , இதில் எழுதியிருக்கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்.காலம் சமீபமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.
நான்காவது வசனத்தில் பார்க்கும் போது, யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது; இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும் - இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின இந்த காரியங்களை இந்த ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுகிறார். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும் - இது யாரைக் குறிக்கிறது என்றால் பிதாவாகிய தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் குறிக்கிறது. அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. ஏசாயா 11 வது அதிகாரம் 2 வசனமும் ஏசாயா 28 வது அதிகாரம் 6 வது வசனமும் நாம் பார்க்கும்போது ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுற பயத்தை அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் தங்கியிருப்பார். 1) ஞானத்தை அருளும் ஆவி 2) உணர்வை அருளும் ஆவி 3) ஆலோசனை அருளும் ஆவி 4) பெலனை அருளும் ஆவி 5) அறிவை அருளும் ஆவி 6) கர்த்தருக்குப் பயப்படுற பயத்தை அருளும் ஆவி 7) நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும் என்று 7 ஆவியை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த 7 ஆவிகள் சேர்ந்து தான் பரிசுத்த ஆவியானவர்.
ஐந்தாவது வசனம் , உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.இது இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
ஆறாவது வசனம் , நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆக்கின அவருடைய மகிமையும் வல்லமையும் என்றைக்கும் உண்டாயிருப்பதாக ஆமென். இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய ரத்தத்தினாலே நம்முடைய பாவங்களை கழுவி தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆக்கினார்.1 பேதுரு 9 வது வசனம் நீங்களோ உங்ககளை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரிகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
ஏழாவது வசனம் ; இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென். தானியேல் ஏழாவது அதிகாரம் 13வது வசனம் , இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார், அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து அவர் சமீபத்தில் கொண்டு வரப்பட்டார். நீண்ட ஆயுசுள்ளவர் என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது. மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. கண்கள் யாவும் அவரைக் காணும் அவரை குத்தினவர்களும் அவரை காண்பார்கள் என்பது, இந்த பூமியில் இருக்கிற அனைவரும் அவரைக் காண்பார்கள் என்பதே. அவரைக் குத்தினவர்கள் என்பது யூதர்களைக் குறிக்கிறது. யோவான் 19வது அதிகாரம் 34 ஆவது வசனம்; ஆகிலும் போர் சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான் உடனே ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது . யோவான் 19வது அதிகாரம் 37 ஆவது வசனம் அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கி பார்ப்பார்கள் என்று வேறொரு வேத வாக்கியம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் இருக்கும் போது அவரை ஒரு போர் சேவகன் அவருடைய விலா எலும்பில் குத்துகிறான். இந்த காரியத்தை தான் அவரை குத்தினவர்கள் அவரை காண்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. சகரியா 12 வது அதிகாரம் 10 வது வசனத்தில் பார்க்கும்போது; நான் தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேம் குடிகளின் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தங்கள் குத்தன என்னை நோக்கி பார்த்து ஒருவன் தன் ஒரே பேரானவனுக்காக புலம்புகிறது போல எனக்காக புலம்பி ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காக துக்கிக்கிறது போல எனக்காக மனம் கசந்து துக்கிப்பார்கள். ஒருவன் தன்னுடைய ஒரே பேரான பிள்ளைக்காக புலம்புகிறது போல இயேசு கிறிஸ்துவுக்காக புலம்புவார்கள். ஒருவன் தன்னுடைய தலைச்சன்பிள்ளைக்காக புலம்புகிறது போல மனங்கசந்து துக்கிப்பார்கள் என்று ஏற்கனவே சகரியா தீர்க்கதரிசியை கொண்டு இந்த தீர்க்கதரிசனத்தை சொல்லி இருக்கிறார்.
எட்டாவது வசனம் நாம் பார்க்கும்போது இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவரும் ஆகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நான் அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார். இதே காரியம்தான் நாம் 4 வது வசனத்திலும் பார்த்தோம் இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய கர்த்தர் என்று யோவான் சொல்லியிருப்பார்.அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் என்றால் முதலும் முடிவும் என்று அர்த்தம்.
ஒன்பதாவது வசனம்; 1) உங்கள் சகோதரனும் 2) இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
பத்தாவது வாசனம் ; கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் அப்பொழுது எனக்கு பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தை கேட்டேன். இந்த சம்பவம் நடக்கிற அந்த நாள் அதுதான் கர்த்தருடைய நாள். எசேக்கியேல் 37வது அதிகாரம் 1வது வசனத்தில் நம்ம பார்க்கும்போது கர்த்தருடைய கரம் / கர்த்தருடைய கை எசேக்கியேல் மேலே இருக்கும்போது அவர் ஆவிக்கு உள்ளாகிறார். அதே மாதிரிதான் கர்த்தருடைய கரம் / கர்த்தருடைய கை யோவான் மேல் அமர்ந்த போது பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம் அவருக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு உண்டாகும் தேவனுடைய தரிசனங்களை அவர்கள் காண்பார்கள். இந்த காரியத்தை நம்ம எசேக்கியேல் 1-வது அதிகாரம் 3 வது வசனம், 9 வது வசனத்திலும் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடியும். தரிசனம் காணுதல் அல்லது ஞான திருஷ்டி அடைதல் என்று சொல்லலாம். அப்படி இருக்கும் போது அவருக்கு பின்னாலே எக்காள சத்தம் போல ஒரு சத்தம் உண்டாகிறது. எக்காள சத்தம் அப்படிஎன்றால் அது கர்த்தருடைய சத்தம். சத்தம் என்னது கர்த்தருடைய வார்த்தையை குறிக்கிறது. எசேக்கியேல் 1 வது அதிகாரம் 24வது வசனம், எசேக்கியேல் 43 வது அதிகாரம் 2 வது வசனத்தில் பார்க்கும்போது கர்த்தருடைய சத்தம் பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல இருக்கும்.
பதினொன்றாவது வசனம்;அது நான் அல்வாவும் ஒமேகாவும் முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன். நீ காண்கிறது ஒரு புத்தகத்தில் எழுதி ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
12 - 16 வது வசனத்தில் பார்க்கும்போது அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் சொல்லியிருக்கிறது. (நிலையங்கி என்றால் ஒரே துணி) அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டையும் புறப்பட்டது என்பது எபிரேயர் 4 வது அதிகாரம் 12வது வசனத்தில் பார்க்கும்போது தேவனுடைய வார்த்தை தான் இருபுறமும் கருகுள்ள பட்டயமாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருகுள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும் ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊன்களையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்குறதாயும் இருக்கிறது. அவர் வாயிலிருந்து இருபுறமும் கருகுள்ள பட்டயம் புறப்பட்டது என்பது அவர் வாயில் இருந்து வார்த்தை தேவனுடைய வார்த்தை புறப்பட்டது என்று அர்த்தம்.
17வது வசனத்தினுடைய பின்பகுதியை நாம் வாசிக்கும் போது, அப்பொழுது அவர் தன்னுடைய வலது கரத்தை என் மேல் வைத்து என்னை நோக்கி பயப்படாதே நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; இந்த காரியத்தை நாம் இரண்டு இடத்துல் ஏற்கனவே பார்த்தோம். அதாவது எட்டாவது வசனத்தில் நாம் பார்த்தோம் அதே மாதிரி 11-வது வசனத்தில் பார்த்தோம்.
Comments
Post a Comment