கர்த்தருடைய கரம்
கர்த்தருடைய கரம்
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போ 11: 21
கர்த்தரின் கரம் எப்படிப்பட்டது?
தயவுள்ள கரம் (எஸ்றா 7:9)
பலத்த கரம் (யோசுவா 4:23)
வல்லமையுள்ள கரம் (உபா 5:15)
பராக்கிரமமுள்ள கரம் (சங் 89:13)
உன்னதமான கரம் ( சங் 89 :13)
நீதியின் கரம் ( ஏசா 41:10)
தேவனின் கரம் என்ன செய்யும்?
ஆவிக்குள்ளாகும் (எசே37:1)
நன்மையாகவே இருக்கும் (எஸ்றா 8:22)
ஒருமனப்படுத்தும் (2 நாளா 30:12)
இரட்சிக்கும் (ஏசா 59:1)
திடன் உண்டாக்கும் (எஸ்றா 7: 28)
தப்புவிக்கும் (எஸ்றா 8:31) ( சங் 17:14)
நம்மை உருவாக்கும் (சங் 119:73)
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
எஸ்றா 7:6
2)யோவான்
அவைகளைச் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
லூக்கா 1:66
3) எலியா
கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.
1 இராஜாக்கள் 18:46
4) எலிசா
இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான், சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,
2 இராஜாக்கள் 3:15
5) அப்போஸ்தலர்கள்
கர்தருடைய கரம் அவர்களோடே இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
அப்போஸ்தலர் 11:21
6) எசேக்கியேல்
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
எசேக்கியேல் 1:3
7) ஏசாயா
கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடிக்கு எனக்குப் புத்தி சொல்லி விளம்பினதாவது:
(ஏசாயா 8:11)
8) எரேமியா
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்
எரேமியா 1:9
1)யோவான் - அனேகரை கர்த்தரிடத்தில் திருப்பினான்
2) எஸ்றா - கட்டளையை நியாயங்களை உபதேசிக்கவும் இருதயத்தை திருப்பினான்.
3)எலிசா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
4) எலியா- தீர்க்கதரிசி உரைக்கிறார்
5) அப்போஸ்தலர்கள்- அநேக ஜனங்களை கர்த்தரிடத்தில் திருப்பினார்கள்.
6) எசேக்கியேல்- ஜனங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எச்சரிக்கை வேண்டும்.
7) ஏசாயா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
8) எரேமியா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
Comments
Post a Comment