யோவேல் தீர்க்கதரிசன புத்தகம்
யோவேல் தீர்க்கதரிசன புத்தகம்.
அறுபத்தாறு புத்தகங்களை மட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம். சுலபமாக கற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக இது பழைய ஏற்பாடு
( உடன்படிக்கை ) என்றும் புதிய ஏற்பாடு ( உடன்படிக்கை ) என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இதில் உள்ளன.
பழைய ஏற்பாட்டை எளிதில் கற்பதற்கு வசதியாக நன்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. ஐந்தாகமங்கள் ( ஆதியாகமம் முதல் உபாகமம் வரை )
2. வரலாற்று நூல்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை )
3. கவிதை நூல்கள் ( யோபு முதல் எஸ்தர் வரை )
4. தீர்க்கதரிசன புத்தகங்கள் ( ஏசாயா முதல் மல்கியா வரை )
தீர்க்கதரிசிகள்
இஸ்ரவேலின் வரலாற்றில் அதின் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தவர்களே தீர்க்கதரிசிகள். மக்களின் ஆன்மீக பொருளாதார அரசியல் மற்றும் எல்லாத் துறைகளிலும் தீர்க்கதரிசிகளின் ஆதிக்கத்தை காணலாம். தங்களுக்கு கிடைத்த தெய்வீக வெளிப்பாடுகளை எழுத்து வடிவமாகவோ பேச்சின் மூலமாகவோ, எடுத்துக்காட்டான வாழ்க்கையின்
மூலமாகவோ, எடுத்துக்காட்டான வாழ்கையின் மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை அறிவித்து வந்தனர். இத்தீர்க்கதரிசன நூல்களை பெரிய தீர்க்கதரிசன நூல்கள், சிறிய தீர்க்கதரிசன நூல்கள் என இரண்டாக பிரிக்கலாம். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் ஆகியோர் பெரிய தீர்க்கதரிசிகள் ஆவர். ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய் , சகரியா, மல்கியா ஆகியோர் சிறிய தீர்க்கதரிசிகள் ஆவர்.
யோவேல் தீர்க்கதரிசன புத்தகத்தைக் குறித்து இங்கே
👇பார்க்கலாம்
Comments
Post a Comment