நன்மை வருமென காத்திருந்த தீமை வந்தது. ஏன்?

      


 


நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது.

யோபு 30:26


  இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.

எரேமியா 39:16


   என் கண்களை அவர்கள் மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். ஆமோஸ் 9:4

 

நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள். ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து வந்தது. மீகா 1:12


 இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்.எரேமியா 44:27



நன்மை வருமென காத்திருந்து தீமை வந்தது.

ஏன்?


1.தீமை செய்தல்


 தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. 

1 பேதுரு 3:12


நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? 

1 பேதுரு 3:13


  தீமையைத்தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 

நீதி் 11:27


 நன்மைக்கு தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டு தீமை நீங்காது. நீதி 17:13


 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புச் செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து, 


 வயல்களை இச்சித்துப் பறித்துக் கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக் கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ! 


ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன். அதினின்று நீங்கள் கழுத்தை நீக்க மாட்டீர்கள். நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை. அது தீமையான காலம். 

மீகா 2:1-3


2)கர்த்தருடைய சொல் கேட்காதது


அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். 

எரேமியா 25:6


 நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 

எரேமியா 25:7



3) கர்த்தருக்கு பயப்படும் பயம் இல்லாதது


 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்து கொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

எரேமியா 2:19


 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது, அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்: தீமை அவனை அணுகாது. 

நீதிமொழிகள் 19:23


ஆமென்







Comments

Popular posts from this blog

கர்த்தருடைய கரம்

இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?

சிந்தை / சிந்தனை