முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலையில் ஆசீர்வாதம்
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
யோபு 42:12
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
யோபு 42:13
முன்னிலைமையைப் பார்க்கிலும்
பின்னிலையில் ஆசீர்வாதம்
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
யோபு 1:1
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
யோபு 1:10
1) கர்த்தரை குறை சொல்லவில்லை
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
யோபு 1:21
இவை எல்லாவற்றிலும் பாவஞ்செய்யவுமில்லை தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
யோபு 1:22
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்: தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான். இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
யோபு 2:10
2) உத்தமத்தை விட்டு விலகவில்லை
நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக. என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன்.
யோபு 27:5
என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன். அதை நான் விட்டுவிடேன். நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
யோபு 27:6
4) சிநேகிதருக்காக வேண்டுதல் செய்கிறான்
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். யோபு 42:10
5) கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறான்
அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு 13:15
ஆமென்
ஆமென்
ஆமென்
Comments
Post a Comment