வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை

வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 1 திவ்விய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின முதலாவது அதிகாரம் முதலாவது வசனத்தில் நாம் பார்க்கும் போது சீக்கிரம் சம்பவிக்க வேண்டியவைகள் என்று எழுதி இருக்கிறது. இந்த புத்தகம் எழுதி 2000 வருடத்திற்கு மேல் ஆகிறது. சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள் அப்படியென்றால் திடீரென சம்பவிக்க வேண்டியவைகள் என்று அர்த்தம். அப்படி சீக்கிரத்துல் சம்பவிக்க வேண்டிய காரியத்தை தேவன், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இயேசு கிறிஸ்து தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். அதாவது சடுதியாக திடீரென நடக்கப் போகிற சம்பவிக்க போகிற காரியத்தை தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும் பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இயேசு கிறிஸ்து ஒரு தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின காரியம் தான் இந்த வெளிப்படுத்தின விசேஷம். இரண...